June 29, 2015

அகதி முகாமில் இலங்கையர்கள் இருவர் சாகும் வரை உண்ணவிரதம்!

இந்தியா அகதி முகாமில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உண்ணாவிரத போராட்டத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தங்களுக்கு உள்ள பிரச்சினை தொடர்பில் கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறு இந்திய அதிகாரிகள் அகதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் திருச்சி பிராந்தியத்தில் பெரம்பலூர் பிரதேசத்தில் குறித்த அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment