June 29, 2015

யுவதியின் பின்னால் சென்று கற்பழிக்க முயன்ற காமூகன்! வவுனியாவில் சம்பவம் !

வவுனியாவில் நேற்று ஒரு காமுகனின் கையில் சிக்கிய யுவதி அதிர்ஸ்டவசமாக தப்பித்துள்ளார்.
ஆட்களற்ற குளக்கட்டு பகுதியில் வைத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்ய
முயற்சித்தபோது, யுவதி கத்திக்குழறி ஆர்ப்பாட்டம் புரிந்ததையடுத்து, காமுகன் தலைதெறிக்க தப்பியோடிவிட்டான்.
இந்த சம்பவம் நேற்று காலை வவுனியாவின் தாண்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள குளக்கட்டு பகுதியில் நடந்துள்ளது.
காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாண்டிக்குளத்திலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டு பாதையில் யுவதி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அவரின் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபன் ஒருவன்,ஆள் நடமாட்டம் குறைந்த இந்த வீதியில் கைவரிசையை காட்ட முனைந்துள்ளான். யுவதியை பிடித்து, அச்சுறுத்தி வல்லுறவு புரிய முயன்றுள்ளான்.
தன் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபன் திடீரென காமுகனாக மாறியதால் யுவதி அதிர்ச்சியடைந்து கத்திக்குழறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
அதிர்ஸ்டவசமாக சிலர் அந்த வீதியால் வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் சத்தம் கேட்டு. அந்தப்பகுதிக்கு ஓடிவர ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் ஓடிவருவதை கண்ட காமுகன், தப்பினேன் பிழைத்தேன் என தலைதெறிக்க ஓடித்தப்பிவிட்டான்.

No comments:

Post a Comment