June 29, 2015

மாவீரர் நினைவுசுமந்து யேர்மனியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி(படங்கள் இணைப்பு)

யேர்மனியில் நேற்றைய தினம் மாவீரர் நினைவுசுமந்து உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது . இப் போட்டி யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இப் போட்டியில் தமிழாலயங்களின் விளையாட்டுக்   கழகங்களுக்கான போட்டிகளும் பல்வேறு வயது அடிப்படையில் நடைபெற்றது , அத்தோடு பெண்கள் அணிகளுக்கான போட்டிகளும் சிறப்பாக இடம்பெற்றது .
மாவீரர் வெற்றிக்கிண்ணத்துக்கான இப் போட்டியில் யேர்மன் நாட்டுக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி ,   தமிழாலயக்கொடி ஏற்றப்பட்டு , அகவணக்கத்தோடு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன . போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் இளையோர்கள் தமது திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாகும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இறுதியாக போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் , திறமையான வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிப்பு நடைபெற்றது.
s2s3s4s5s6s7s8s9s10s12s11s13s21s20s18s17s16s15s14

No comments:

Post a Comment