June 23, 2015

அடுத்த யுத்தத்தையும் வெற்றி கொள்வோம்; ஐ.தே.க இளைஞர் மாநாட்டில் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டது போல, பொதுத் தேர்தல் எனும் அடுத்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்கள் மாநாடு அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு கல்வி, உயர் தொழிநுட்பம், வேலைவாய்ப்பு போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். இந்த தேவைகளை பூர்த்திசெய்ய ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க தயாராகுங்கள் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment