June 23, 2015

நீதிமன்றத்திற்கு டிமிக்கி விட்டுத் திரிந்த காவாலி பொலிசாரால் ஆயுத முனையில் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார் !

 நீண்டநாள்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று சுன்னாகம் மயிலணி கந்தசுவாமி ஆலயப் பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

மல்லாகம், ஏழாலை, குப்பிளான், சுன்னாகம், உடுவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவந்த இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமந்தப்பட்டிருந்தன.
இவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
நேற்று இரவு மயிலணி கந்தசுவாமி ஆலயப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரை ஆயுத முனையில் கைது செய்தனர். இவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment