August 1, 2016

புலம்­பெயர் வாழ் மக்­க­ளி­ன் பலமும், பல­வீனமும்!

உலக விட­யங்­களில் பொது நலம், சுய­நலம் போன்று பலம், பல­வீனம் என்­பதும் பல­ரினால் பல­வி­தங்­களில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. பொது நலத்தில் சுய­ந­லமா? அல்­லது சுய­ந­லத்தில் பொது­ந­லமா? என்­பது போல் பலம் பல­வீ­ன­மா­கி­றதா? பல­வீனம் பலம் ஆக்­கப்­ப­டு­கி­றதா என்ற கேள்­விக்கு இன்று உலகில் பதில் கிடைத்­ததா­க­வில்லை.
இலங்­கைத்­தீவு வாழ் ஈழத்­த­மிழர், அதா­வது, வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தமது தாய­க­மாகக் கொண்ட தமி­ழர்­க­ளது கலை கலா­சாரம், வாழ்­வா­தாரம் என்­பவை ஓர் நீண்ட சரித்­தி­ரத்தை கொண்­டவை என்­பதை இங்கு எழுதி விவ­ரிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

கால­ணித்­துவ ஆட்­சி­யா­ள­ரான பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து இலங்கைத்தீவு சுதந்­திரம் பெற்ற தினத்தில் ஆரம்­ப­மா­கிய தமிழ் மக்­க­ளது அர­சியல் உரிமை, அர­சியல் அபி­லா­சை­க­ளுக்­காக போராட்டம் இன்று வரை தொடர்­க­தை­யாக சென்று கொண்­டி­ருக்­கி­றது. சாத்­வீக போராட்­டத்தில் வெற்றி காண முடி­யாத நிலையில், ஆயுத போராட்டம் ஆரம்­ப­மா­கி­யது என்­பது சரித்­திரம்.

சாத்­வீ­கத்­தினால் சாதிக்க முடி­யா­த­வற்றை ஆயுத போராட்­டத்­தினால் வெற்றி கண்­ட­துடன், தமி­ழர்­க­ளது தாயக பூமி­யான வடக்கு கிழக்கில் ஏறக்­கு­றைய எழு­பத்து ஐந்து (75%) வீத­மான நிலப்­ப­ரப்பை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டி­ருந்த தமி­ழீழ விடு­தலைப்புலிகள், ஓர் தன்­னாட்சி கொண்ட நிரு­வா­கத்தை பல­வ­ரு­டங்­க­ளாக நடாத்­தி­யி­ருந்­தார்­க­ளென்­பதும் சரித்­திரம்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக சிங்­கள ஆட்­சி­யா­ளர்கள், தமது நரித்­த­ன­மான ராஜ­தந்­திர நகர்­வு­க­ளினால், சர்­வ­தேச நாடு­களில் ஆத­ர­வு­களைப் பெற்று சர்­வ­தேச வரை­ய­றைகள் சட்­டங்­க­ளிற்கு முர­ணான முர்கத்தனமான போர் மூலம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழரது ஆயுதப் போராட்டத்தை வெற்றி கொண்டார்களென்பது தற்போதைய சரித்திரம். உலகில் ஆயுதபோராட்டம் மூலம் வெற்றிகளை கண்ட ஏரித்தீரியா, கிழக்கு தீமூர், கோசாவா, தென் சூடான் வரிசையில் வீறு நடை போட்ட தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்டம் இன்று மௌனிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆயுதப் போராட்டத்திற்கான விலையை மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த விடுதலை போராட்டமும் கொடுத்திருக்கவில்லை! இன சுத்திகரிப்பு, நில அபகரிப்பு, உயிர்சேதங்கள், சொத்து சேதங்களென அடுக்கி கொண்டே போக முடியும். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட எந்தவோர் விடுதலைப் போராட்டத்திற்கு இல்லாத ஓர் பாரீய புலம் பெயர் வாழ் சமூகத்தை, தமிழீழ விடுதலை போராட்டம் மட்டுமே கொண்டிருந்தது கொண்டுள்ளது.
இப்­படி பாரிய எண்­ணிக்­கையில் புலம்­பெயர் வாழ் தமி­ழர்கள் உலகம் பூரா­கவும் பரந்து வாழ்­வது மட்­டு­மல்­லாது, ஆயுதப் போராட்­டத்­திற்கு உறு­து­ணை­யான காரி­யா­ல­யங்கள், வர்த்­தக நிறு­வ­னங்கள் வேறு­பட்ட நாடு­களின் அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான நெருங்­கிய உற­வு­களின் மத்­தியில் ஈழத் தமிழர் அர­சியல் இருப்பை இலங்கைத் தீவில் பறி­ கொ­டுத்து இன்று அநா­த­ர­வா­ன­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­தற்கு புலம்­பெயர் வாழ் சமூ­கத்தின் செயற்­பா­டு­க­ளுமே கார­ணி­யாக அமைந்­துள்­ளது. தொடர்ந்து அமை­கி­ன்றது என்ற யதார்த்­தத்தை யாரும் மறுக்க முடி­யாது.

நம்­பிக்கை துரோகம்
சகல வெற்றி தோல்­வி­களில் முக்­கிய கர்த்­தா­வாக விளங்­கு­வது பலம், பல­வீனம் என்­பதே. உள­வியல் நிபு­ணர்கள், ஆய்­வா­ளர்­களின் கருத்­து­களில் முரண்­பா­டுகள் காணப்­பட்ட பொழு­திலும் ஓர் பொது உண்மை இவ் தர்க்­கங்­களின் அடிப்­ப­டையில் வெளி­யா­கின்­றது.

இதை தான் “நம்­பிக்கை துரோகம்” என்­பார்கள். அதா­வது தமி­ழீழ விடு­தலைப் போராட்­டத்தின் இறு­தி­காலப் பகு­தி­களில் அதா­வது 2005 ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு காலப் பகு­தி­களில் நம்­பிக்கை துரோகம், காட்டி கொடுப்­புக்கள் நிலத்­திலும் புலத்­திலும் ஆரம்­ப­மாகி விட்­டது. இந் நிலையில் பொது நலத்தில் சுய நலமா? அல்­லது சுய நலத்தில் பொது­ந­லமா என்ற வரை­ய­றைக்கு அப்பால் “கபட தன்­மைகள்” நிலை ­கொண்டு விட்­டன.

இன்­றைய நிலையில் நிலத்தில் அதா­வது தமி­ழர்­க­ளது தாயக பூமியில் நடப்­ப­வற்றை ஆராய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கார­ண­மாக அவை­யாவும் தற்­போ­தைய நிலையில் வெளிப்­ப­டை­யாக நடை­பெ­று­கின்­றன. ஆனால் புலம்­பெயர் தேசங்­களில் காணப்­படும் கபட தன்­மைகள் புலம்­பெயர் வாழ் மக்­க­ளி­டையே ஒற்­று­மை­யின்­மைக்கு வழி­கோ­லு­வ­துடன் புலம்­பெயர் மக்­க­ளி­டையே “பிரித்து ஆளும்” தன்­மையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இவற்றின் அடிப்­படை பலம் பல­வீனம் என்­பதே உண்மை.

பலம், பல­வீனம்

புலம்­பெயர் தேசத்தில் காணப்­படும் பலம் என்­பது புலம்­பெ­யர்ந்த மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் மேற்கு நாடு­களில் அதா­வது ஜன­நா­யக நாடு­களில் தமது இருப்பை நிலை கொண்­டி­ருப்­பதும் பெரும்­பான்­மை­யான இந் நாடுகள் தமிழ் மக்­க­ளது நீண்­ட­கால அர­சியல் சரித்­தி­ரங்­களை தெரிந்­தி­ருப்­பதும், இவ்­வ­கையில் ஜன­நா­யக அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­படும் எந்த நட­வ­டிக்­கைக்கும் இந்த நாடு­களில் இடை­யூறு ஏற்­ப­டாது என்­ப­துடன் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, கனடா, சுவிஸ், ஜேர்­மனி, நோர்வே போன்ற நாடு­களின் அர­சாங்­கங்­களும் மேலோட்­ட­மாக ஸ்ரீலங்கா நிலை­களை கண்­கா­ணிக்­கின்­றன.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக “பல­வீனம்” என்­பதை நாம் ஆராய்­வோ­மானால் இங்­குதான் ஐக்­கி­ய­மின்­மைக்­கான முக்­கிய கார­ணி­க­ளான கபட நாட­கங்கள் பணம் என்ற அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. உலகின் புல­னாய்வு நிறு­வ­னங்­களின் செயற்­பாடு என்­பது ஒரு­வரின் பலம் பல­வீ­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்­வ­டிப்­ப­டையில் போதை­வஸ்து கடத்தல் கார­ண­மாக சிறை சென்­ற­வர்கள், சமூக குடும்ப வாழ்க்­கையில் தனிப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்­களில் நேர்­மை­யற்­ற­வர்கள், புத்தகப்படிப்போ பண்போ அறவே அற்றவர்கள் இனம் தெரிந்த தெரி­யாத புல­னாய்­வா­ளரின் பணத்­திற்கு அடி­மை­யா­வ­துடன், இவர்­களின் பல­வீனம் ஓர் இனத்தின் அழி­வுக்கு வழி கோலு­கி­றது. இதற்கு சில புலம்­பெயர் வாழ் தமி­ழர்கள் விதி விலக்­கா­ன­வர்கள் அல்ல. இங்­குதான் யாவரும் திகைத்து நிற்கும் ஐக்­கி­ய­மின்­மைக்கு விடை காணப்­ப­டு­கி­றது.

ஆயுதப் போராட்­டத்தின் முக்­கிய காலப் பகு­தி­யான 2006 ஆம் ஆண்­டிற்கு முன்னர் புலம்­பெயர் செயற்­பாட்­டாளர் என்­ப­தற்கு ஓர் அர்த்தம் காணப்­பட்­டது. தகுதி நேர்மை, அர்ப்­ப­ணிப்பு போன்­ற­வற்றின் அடிப்­ப­டையில் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

இவற்­றிலும் சில விதி­வி­லக்­குகள் உண்டு என்­பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். காரணம் அக்­கால பகு­தியில் வேலை செய்த ஒரு சிலர் தமி­ழீழ விடு­தலைப் புலி­களை பழி­வாங்கும் செயற் திட்­டத்­திற்கு முன்­னின்று உழைத்­தார்கள் என்­பதை காலம் சென்றே அறிய முடிந்­தது.

புலம்­பெயர் தேசத்தில் காணப்­படும் தற்­போ­தைய ஐக்­கி­ய­மின்மை என்­பது நன்கு திட்­ட­மி­டப்­பட்டு பல கோடி பணம் செலவழிக்கப்பட்டு கபட நாடகங்கள் மூலம் நிறைவேற்றப்படுபவை.

இவற்­றிற்கு எந்­த­வித தேற்­றங்­களோ தத்­து­வங்­களோ தேவை­யில்லை. சமு­தா­யத்தில் முன்பு ஒதுக்கி வைக்­கப்­பட்­ட­வர்கள் தற்­பொ­ழுது காணப்­படும் இடை­வெ­ளியை பாவித்து நடை­பெறும் ராஜ­தந்­திர போராட்­டத்­திற்கு தலைமை தாங்க முன்­வரும் பொழுது மோதல்கள், கருத்து வேறு­பா­டுகள் ஏற்­பட்டே தீரும்.

என்னை பொறுத்­த­ வ­ரையில் தற்­பொ­ழுது காணப்­படும் ஒற்­று­மை­யின்மை என்­பது சூரிய வெப்பம் வரும் பொழுது ஐஸ் கட்டி கரை­வது போல் இன்னும் சில காலத்தில் கரையும் என்­பதில் ஐய­மில்லை. உலகில் பொய்கள், புரட்­டு­தல்கள், கபட நாடகங்கள் நிலைத்ததில்லை.

No comments:

Post a Comment