June 24, 2015

தமிழகத்தில் இருந்து மற்றுமொரு தொகுதி அகதிகள் நாடு திரும்பினர்!

தமிழகத்தில் பல வருடங்களாக தங்கியிருந்த இலங்கை அகதிகளின் ஒரு தொகுதியினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 41 பேர் கொண்ட அகதிகள் குழுவொன்று நாடு திரும்பியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நாடு திரும்பியவர்களில் 18 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment