May 21, 2015

வித்தியாவின் படுகொலையை கண்டித்து மல்லாவியில் தொடரும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து இன்று இரண்டாம் நாளாக மல்லாவியில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் மாந்தை கிழக்கு கோட்டப்பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு கண்டனப் பேரணிகளை நடத்தினர்.

இதில் பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் வித்தியாவின் படுககொலைக்கு கண்டனங்களை வெளியிட்டதுடன் நீதி கோரினர்.
மாணவி வித்தியா துணுக்காய் ஆரம்ப பாடசாலையில் பழைய மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment