September 25, 2015

73 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத அராலி மத்தியில் உள்ள உள்ளக வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைத்தார் வடக்கு வீதி !

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அராலி மத்தியில் அமைந்துள்ள அல்லியபுலம் வீதி சுமார் 73 ஆண்டுகளின் பின்னர் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் 2 மில்லியன் செலவில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஓய்வுபெற்ற அதிபர் தெரிவிக்கையில் கடந்த 73 ஆண்டுகளின் பின்னர் நமது மாகாண சபை அமைச்சரால் இத்திட்டம் நிறைவேறுவதை இட்டு தாமும் தமது மக்களும் மிகவும் உள்ளம் நிறைந்த உவகை அடைவதாகவும், அவரது இவ் வேலைத்திட்டத்துக்கு தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் தனது உரையில் இது எமது மாகாணம் என்றும் தனது உதவிகள் பாரபட்சம் இன்றி ஐந்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும் என்றும், இந்த அல்லியபுலம் வீதிக்கான நிதியை ஒதுக்கி அதனை நடைமுறை படுத்தும் அளவுக்கும் முக்கிய காரணமானவர்கள் இங்குள்ள இளைய சமூகமே என்றும் அவர்களது அணுகுமுறை தமக்கு பிடித்திருந்தது என்றும் தெரிவித்தார்.
நிகழ்விற்கு யாழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் திரு.முரளிதரன் அவர்களும் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment