September 25, 2015

அமெரிக்காவின் புதிய யோசனைக்கு இலங்கை அனுசரணை!

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதனூடாக இலங்கையை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்காமல் நாட்டிலுள் ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு உலகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து யோசனைகளும் இலங்கையின் அரசியலமப்புக்கு உட்பட்டே செயற்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment