March 1, 2015

வேலியில் ஓட்டை போட்டு யுவதியின் நிர்வாணக்குளியலை ரசித்த காவாலி - தாய் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த யுவதியை ஒளிந்திருந்து பார்த்த இளைஞன், யுவதியின் தாயை தாக்கிய சம்பவம் வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக

தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

தான் குளிப்பதை பக்கத்துவீட்டு இளைஞன், வேலிக்குள் ஒளிந்திருந்து பார்ப்பதாக குறித்த யுவதி தனது தாயாரிடம் சென்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, அது தொடர்பில் இளைஞனின் பெற்றோரிடம் முறையிட யுவதியின் தாயார், சென்றுள்ளார். அதன்போது, யுவதியின் தாயை குறித்த இளைஞன் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.


தலையில் காயமடைந்த யுவதியின் தாய், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment