March 1, 2015

அரசியல் கைதிகள் விடுதலை - காணாமல் போனோரை கண்டறிதலினை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்?

அரசியல் கைதிகளது விடுதலை மற்றும் காணாமல் போனோரை கண்டறிதல் என்பவற்றினை வலியுறுத்தி சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க யாழ்ப்பாணம் தயாராகின்றது.


விரைவில் யாழ்.நகரில் தொடர் சாகும்வரையான உண்ணா விரதப் போராட்டத்தில் குதிக்க அன்னையர் மக்கள் முன்னணி மற்றும் காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் அமைப்பு மற்றும் பெற்றோர்களென பல தரப்புக்களும் இப்போராட்டத்தில் கூட்டிணைந்து களம் இறங்கவுள்ளன..

இப்போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் சிவில் சமூக அமையமென பலதரப்புக்களும் பகிரங்கமாக தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. அவையும் களமிறங்கலாமென நம்பப்படுகின்றது.

முன்னதாக காணாமல் போனோரை தேடிக்கண்டறிய இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை நிராகரிப்பதென சிவில் சமூக அமையம் மற்றும் காணாமல் போனோரிற்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் அறிவித்து அதனை அமுல்படுத்த தொடங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாகவே சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பது பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment