March 9, 2015

மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு!

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மக்கள் மீள்குடியேற வேண்டாம் என புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் எதிர்வரும் 25ம் திகதி வரை தற்காலிகமாக மீள்குடியேற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதி மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த மக்களை குடியேறவேண்டாம் என பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
தமது பூர்வீக காணிகளே அவை என்று மக்கள் தெரிவித்தபோதும் குறித்த காணிகள் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குரியவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் இன்று இந்த இடத்தை பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக இந்நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment