March 8, 2015

பழைய கொள்கையே புதிய அரசாங்கத்திடமும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு

புதிய அரசாங்கம் அரசாங்கத்தின் கொள்கைகளையே கடைபிடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு
வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான எத்தனிப்புகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்தகால ஆட்சிகளின் போது நிலவியதைப் போன்றே, தற்போதும் இனப்பிரச்சினை தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment