March 2, 2015

யாழில் முஸ்லீம் மாணவிகள் மீது அங்கசேட்டை!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் நேற்று காலையில் இரண்டு முஸ்லீம் யுவதிகள் மீது அங்கசேட்டை புரியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. சில முஸ்லீம் இளைஞர்களாலேயே இந்த அநாகரிகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர்களை தேடி பொலிசாரும் வலை விரித்துள்ளனர்.
உயர்தரம் கற்கும் மாணவிகள் இருவர் நேற்று காலையில் தனியார் கல்வி நிலையம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள பழைய இரும்பு விற்பனை செய்யும் நிலையங்களை சேர்ந்த சில முஸ்லீம் வாலிபர்களே இதனை செய்ததாக அந்த பகுதிவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

No comments:

Post a Comment