March 1, 2015

யாழிலிருந்தும் பொலிஸ் அதிகாரிகளிற்கு மாற்றம்!

இலங்கை முழுவதும் பொலிஸ்துறை புரட்டிப்போடப்பட்டுவரும் நிலையினில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு
பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராவிருந்த டீ.பி.நிலந்த ஜெயவர்தன என்பவரும் கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட 8 பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டீ.பி.நிலந்த ஜெயவர்தன கடந்த 9 மாதங்களாக இங்கு கடமையாற்றியிருந்ததாக கூறப்படுகின்றது.

தனக்கு விசுவாசமான பொலிஸ்கட்டமைப்பினை பேணும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே ரணில் அரசு இம்மாற்றத்தை செய்திருக்கலாமென நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment