February 27, 2015

அமைச்சர்கள், MPக்களின் பிரமுகர்களுக்காக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் வெளியானது!

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் மையம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பாலியல் தொழில் மையம் அத்துருகிரிய பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளது.
சர்வதேச போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதா வழங்கிய தகவலை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த பாலியல் தொழில் மையம் சம்பந்தமாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
விசாரணைகளுக்காக குறித்த பிரதியமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட உள்ளார். இதனிடையே அத்துருகிரிய பிரதேசத்தில் இயங்கிய பாலியல் தொழில் மையத்திற்கு வந்து சென்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் பற்றி கண்டறியவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment