February 27, 2015

யாழ் பிராந்தி பொலிஸ் அத்தியட்சகர் கைது!

யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வீரசிங்க பதிரணலாகே விமலசேனவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் அல்பிட்டிய காவல் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வுப் பிரிவினர் இந்த இரண்டு அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர். பியகம விலேஜ் நிறுவனத்தின் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்னவின் படுகொலை தொடர்பான தகவல்களை வேண்டுமென்றே மூடி மறைத்ததாக இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கொலையுண்டவரின் புதல்வரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment