February 27, 2015

கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் தமிழ் சிப்பாய்கள்!

தமிழ் யுவதி ஒருவர் மேசன்வேலையின் போது அவரது தலையில் கல் விழுந்து படுகாயமடைந்துள்ளார். விசுவமடுவை சேர்ந்த 19 வயதான தெய்வக என்ற யுவதியே
இவ்வாறு படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் இணைத்துக்கொள்ள விளம்பரம் செய்யும்போது, கௌரவமான வேலை, அதிக சம்பளமென பொய் வாக்குறுதிகள் வழங்கியே இணைக்கிறார்கள், ஆனால் அங்கு வைத்து இப்படியான வேலைகளையா செய்விக்கிறீர்கள் என யுவதியின் உறவினர்கள் வைத்தியசாலையில் சர்ச்சையில் ஈடுபட்டனர்.

மேல்தளத்தினில் பணியாற்றிய சக படைசிப்பாய் சீமெந்து வாளியினை கைவிட்டதையடுத்து அது விழுந்தமையாலேயே படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment