November 27, 2014

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற மாவீரர்கள் குடும்ப மதிப்பளிப்பு!

எமது தேசத்துக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்களை
மதிப்பளிக்கும் முகமாக பெல்ஜியம் நாட்டில் வாழும் மாவீரர் குடும்ப உறவுகளை
மதிப்பளிக்கும் நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக
நடைபெற்றது.
பெல்ஜியம் நாட்டில் உள்ள மாவீரர்களுக்கான கல்லறை முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக்கொடி ஏற்றி மாவீரர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர் . மாவீரர் குடும்பங்களுக்கு நினைவுப்பதிவும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது .











No comments:

Post a Comment