November 27, 2014

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் கேர்ணிங் நகரில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் கேர்ணிங் நகரில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

டென்மார்க் தமிழ் மக்களால் மகிழ்வுடன் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் கேர்ணிங் நகரில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ் நிகழ்வு பிரத்தியோகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை 7 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது . இங்கு கலந்துகொண்ட சிறுவர்களினால் தமிழீழம் பொறிக்கப்பட்டகேக் வெட்டப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் கேக் துண்டுகள் வழங்கப்பட்டன.
தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலுடன் மிகவும் மகிழ்ச்சியாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. தேசியத்தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களும் தலைவர் மாமா தலைவர்மாமாவின் பிறந்தநாள் என்று மிகவும் மகிழ்வாகவும் குதூகலமாகவும் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.dcp9766669 (2) dcp9766669

No comments:

Post a Comment