September 10, 2014

தமிழீழமே தீர்வு - ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் , நாள் 7 !

தமிழின அழிப்புக்கு நீதி கோரி , தமிழ் மக்களின் அவலக் குரலை எண்திசைக்கும் பரப்பும் பொருட்டு ஐநா வை நோக்கிய ஈருருளிப்பயணம்
ஏழாவது நாளாக இன்று பிரான்ஸ் நாட்டின் ஊடாக நாளை மாலை சுவிஸ் நாட்டுக்குள் செல்ல இருக்கின்றது . ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் நகரங்களின் நகரபிதாவுடனும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது .
இச் சந்திப்பில் ஈருருளிப்பயணத்தின் கோரிக்கைகளை முன்வைத்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை அனைத்துலக குமூகம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஐந்து அம்ச கோரிக்கைகளும் பின்வருமாறு அமைகின்றது :
 1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
 2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்துஇ நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியம் , பிருஷ்செல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக இருந்து ஐரோப்பிய நாடுகளை கடந்து ஐநா சபையை நோக்கி
நீதிக்கான ஈருருளிப்பயணம் சென்றுகொண்டிருக்கின்றது .

நாளை மாலை 7 மணிக்கு Suwiss Basel St-Louis ( Elsasserstr 250, 4056 Basel) எனும் எல்லைப்பகுதிக்கு ஈருருளிப்பயணம் செல்ல இருக்கின்றது . ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மூன்று உறவுகளையும் வரவேற்க சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது .








No comments:

Post a Comment