September 10, 2014

ஐ.நா. அமைதிப்படையில் சிறீலங்கா விமானப்படை!

 ஐ.நா. அமைதிப்படைக்கு மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு 120 பேர் கொண்ட குழு நேற்று பயணம் இரண்டாவது குழு விரைவில் தென் சூடானுக்கு அனுப்பி
வைக்கப்படும் என்று விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றும் பொருட்டு சிறீலங்கா விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஸல் கோலித்த குணதிலக்க தெரிவித்தார்.
ஐ.நா. அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து கடமையாற்றும் பொருட்டு சிறீலங்கா விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்திகளுடன் 120பேர் கொண்ட குழு நேற்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றது.
இரண்டாவது குழு வெகு விரைவில் தெற்கு சூடான் நோக்கி பயணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறீலங்கா விமானப்படை வரலாற்றில் ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து கடமையாற்றுவதற்காக விமானப்படை உலங்கு வானூர்திகள், விமானப்படை வீரர்களும் புறப்பட்டுச் சென்றமை இதுவே முதற்தடவையாகு மென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment