July 27, 2016

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் – ICRC!

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.



காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.


காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்பது குறித்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொருளாதார, சட்ட, நிர்வாக மற்றும் சமூக ரீதியிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.


2014ம் ஆண்டு ஒக்ரோபர் முதல் 2015 நவம்பர் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குடும்பங்களை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியளிக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment