July 9, 2016

‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ நூல்கள் அறிமுக விழா!

‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ நூல்கள் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது!


இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தமிழக அரசியல் வார இதழில் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டிருந்த ‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ ஆகிய நூல்கள் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

C.I.T. காலணி, மயிலாபூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ அவர்கள் தலைமை தாங்குகிறார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மருத்துவர் அ.தாயப்பன், கவிஞர் பச்சியப்பன் மற்றும் பூங்குழலி ஆகியோர் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றுகின்றனர். இரா.வந்தியத்தேவன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்விற்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


No comments:

Post a Comment