July 27, 2016

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் அஞ்சத் தேவையில்லை! - பொலிஸ் மா அதிபர் !

யாழ். பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும்விலகியிருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது என்று பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.எனினும் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்-

 
சிங்கள மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது. சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏராளம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சீருடையிலும் பொலிசார் கடமையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மாணவர்கள் வருகை தராமல் இருப்பது அவர்களின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று யாழ்.பல்கலைக்கழக சூழல் கொந்தளிப்பானதாக இல்லை. வழமை போன்று அமைதியாகவே காணப்படுகின்றது என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment