July 20, 2016

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை திகதி!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைகளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இம் முறை 2,959 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.
அத்துடன், 350,701 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
இதேவேளை,விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிடின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment