July 27, 2016

விடுவிக்கப்பட்ட 43 இந்திய மீனவர்கள் துணைத் தூதரகத்திடம் கையளிப்பு!

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டதற்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 
இவர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதரகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 43 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment