June 15, 2016

மட்டகளப்பில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்:மூவர் படுகாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்றிரவு 8 மணியளவில் நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில்
அதில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 
கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாழைச்சேனை டிப்போவிற்குச் சொந்தமான பஸ்வண்டியே தாளங்குடா பிரதான வீதியில் தாக்குதலுக்குள்ளாகியது. பஸ்வண்டி சேதமடைந்துள்ளதுடன் மேலும் சிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment