June 1, 2016

வடக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் தயார்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 400 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு திருப்பியளிக்கஇராணுவம் தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இதில் தெல்லிப்பளையின் 200 ஏக்கர் காணியும் அடங்குகிறது.இரண்டு இரண்டு வாரங்களில் இவை திருப்பியளிக்கப்படும் என்று அந்த அதிகாரி நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.

2015ம் ஆண்டின் பின்னர் இதுவரை வடக்கில் 2175 ஏக்கர் காணியும் கிழக்கில் 1.055ஏக்கர் காணியும் படையினரால் பொதுமக்களுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வடக்கில் மீள்குடியமர்வதற்கானகாணிகளை அடையாளப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment