June 1, 2016

தொன்னூற்று மூன்றாவது அகவையில் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வரும் 3ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) 93வது பிறந்த தினத்தைக் கொண்டாட உள்ளார்.
இதையொட்டி அவருடைய அன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம், அன்றைய தினம் காலை 7 மணியளவில் சென்னையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார் கருணாநிதி. தொடர்ச்சியாக, 7.15 மணியளவில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

அதன்பிறகு, 9 மணியளவில் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லும் கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் வாழ்த்துகளையும் பெற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

இதையடுத்து, மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வை.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் விழாவிற்கான மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment