July 17, 2016

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தவில்லை! - ஐரோப்பிய ஒன்றியமும் பல்டி !

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை.
அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை பொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவிதலைமையாளர் போல் கோட்ப்ரே தெரிவித்துள்ளார்.

 
உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment