August 23, 2015

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களது விடுதலைக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம் - கஜேந்திரகுமார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட கட்சியின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வூ
நேற்றயதினம் (22) வடமராட்சியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராசா த.தே.ம.முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் மற்றும் உபதலைவர்களில் ஒருவரும் கட்சியின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment