September 2, 2016

யாழ்.கச்சேரி முன் ஆளுநர் அலுவலக வாசலில் காத்திருக்கும் மக்கள்!! ஓட்டம் எடுத்த பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருக்கும் நிலையில் நீதி வழங்கத் தவறிய ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்து, காணமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பு இடங்களை விடுவிக்கக் கோரியும் மக்கள் பான் கீ மூனுக்கு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருந்தனர் மக்கள்.


யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற் கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வ வாயிலைத் தவிர்த்து பின்வாசல் வழியாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும்.

மேலும் ஐ. நா செயலாளரிடம் கையளிக்க இருந்த மகஜர் அவரின் உயர் அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment