June 27, 2015

மட்டக்களப்பில் புலனாய்வு கண்காணிப்பு அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அங்கு செயற்படும் சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன.

 மட்டக்களப்பில் உள்ள 14 மாவட்ட செயலக பிரிவுகளிலும் இவ்வாறான கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆலய நிகழ்வுகள்இ சமுக கூட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் காரணமாக மக்களின் நடமாட்ட மற்றும்ஒன்று கூடல் சுதந்திரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமுக அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment