August 31, 2015

டென்மார்க் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினால் 5வது தடவையாக நடாத்தப்படும் தேசத்தின் குயில்கள் 2015 எழுச்சி பாடல்.!

டென்மார்க் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினால் 5வது தடவையாக நடாத்தப்படும் தேசத்தின் குயில்கள் 2015 எழுச்சி பாடல். போட்டியானது இம்முறையும் Ikast நகரில் 05.09.2015 சனிக்கிழமை அன்று
நடைபெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும்
வெளிக்கொணரும் வகையில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது.

இம்முறை தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 05.09.2015 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்,கேணல்.ராயு, கேணல். சங்கர் அவர்களுக்கு அகவணக்க விளக்கேற்றளும் நடைபெறவுள்ளது.
டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரவேசம் இலவசம்.!!!
நாள். 05.09.2015
நேரம். 15:00 pm சனிக்கிழமை

இடம். Ikast Vestreskole
Vestergade 49, 7430 Ikast

தொடர்புகளுக்கு. தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் தொ.இல. 25732814
மின்னஞ்சல். desathinkuyel@gmail.com




No comments:

Post a Comment