July 3, 2015

வல்வெட்டித்துறையில் காணாமல்போன சிறுவர்கள் கொழும்புக்கு வந்தது எப்படி?

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்கள் கடந்த 30ம் திகதி காணாமற்போயிருந்த நிலையில், கொழும்பில் மீட்கப்பட்டுள்ளனர்.
பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய மூன்று சிறவர்களே காணாமற் போயிருந்தனர்.
வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக்கூறி உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றுக்கு நேற்று சென்ற 3 சிறுவர்கள் தங்களுக்கு வேலை தருமாறு கோரியுள்ளனர்.
சிறுவர்கள் மீது சந்தேகம் கொண்ட ஹொட்டல் உரிமையாளர், சிறுவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கத்தை சிறுவர்களிடமிருந்து பெற்று, பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அத்துடன், கொம்பனித் தெரு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
சிறுவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை நேற்று இரவு அவர்களது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment