July 1, 2015

பளை மாணவி தற்கொலை: வாலிபன் தலைமறைவு?

பளை மாணவி தற்கொலைக்கு காரணமான சாவகச்சேரி வாலிபனை விசாரணைக்கு அழைத்தும், அவர் சமூகமளிக்கவில்லை. இது சைபர் குற்றத்துடன் தொடர்புடையதென்பதால் குற்றப்புலனாய்வுத்துறைக்கு
விசாரணை கையளிக்கப்படவுள்ளதாக பளை பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த வாலிபனின் நடத்தை காரணமாகவே யுவதி தற்கொலை செய்து கொண்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த வருமாறு வாலிபனை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், வாலிபன் இதுவரை சமூகமளிக்கவில்லை. அவர் பணியாற்றும் நிறுவனப்பக்கமும் போகாமல் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விரைவில் கையளிக்க எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment