July 2, 2015

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்களைக் காணவில்லை! -

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை (30) முதல் காணவில்லையென அச்சிறுவர்களின் உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
பேபி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும், இதுவரையில் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக்கூறி உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment