July 2, 2015

பருத்தித்துறையில் கேரள கஞ்சா - நால்வர் கைது!

பருத்தித்துறை அம்பன் பகுதியில் 180 கிலோ கேரளகஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் இருந்து கடல்மார்க்கமாக இந்த போதைப் பொருட்கள் கடத்திவரப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - ஒருகொடவத்த, மட்டக்களப்பு மற்றும் செம்பியன்பற்று பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றம் முன்னலை செய்யப்படுகின்றனர்.

No comments:

Post a Comment