July 15, 2015

ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து ஆணும் பெண்ணும் தற்கொலை!

பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
38 வயதான ஆண், 33 வயதான பெண் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரே
இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்துக்கு முன்னால் ஒரு வயது குழந்தையுடன் பாய்ந்தே குறித்த ஆணும் பெண்ணும் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment