September 25, 2015

பாச்சான் ஓடை நில்பான் நெற்றியில் சுடப்பட்டு மரணமானார் ? (படங்கள் இணைப்பு)

இன்று  அதிகாலை  நெற்றியில் சூடு பட்டு காலமான  புத்தளத்தின் புற நகர் பகுதியான பாச்சான் ஓடை  நில்பானின் மரணம் பற்றி புத்தளம் போலீசார்  தொடர்ந்து விசாரிப்பதாக தகவல்கள்  கூறுகின்றன.நேற்று நள்ளிரவில்
 தனது நண்பர்களுடன்  பெருநாள்  பைலா நிகழ்வில்  கலந்து  கொண்டு  விட்டு அதிகாலையில் உறங்கச்சென்ற  நில்பான் ( 24 வயது ) என்ற இளம்  கும்பஸ்தர் அவரின்  வீட்டில்  சுடப்பட்ட  நிலையில்  மரணமாகி இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று  பகல் வரைக்கும் காலமானவரின் ஜனாஸா  நீதவான் வரும் வரையிலும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதுப் பற்றிய  மேலதிக விசாரணைகளுக்காக  காலம் சென்றவரின் தாய்  மனைவி உற்பட  நண்பர்கள் சிலரையும் புத்தளம் பொலீஸ்  நிலையத்திற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அண்மையில்  நகரின் கரையோரக் கிராமமான  பாஞ்சான் ஓடையில்  போதைப் பொருள் விற்கும் கும்பல்  ஒன்றிற்கும் புத்தளம் போலீசாருக்குமிடையில்  ஏற்ப்பட்ட  சச்சரவை அடுத்து  புத்தளம்  பொலீசார்  பெண் ஒருவர்  உற்பட சிலரை கைது  செய்திருந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா  இருக்கும்  குடிலுக்குள்  சென்று  புகைப்படம்  எடுக்க காவலில்  இருந்த  புத்தளம்  பொலீசார் அனுமதிக்கவில்லை. சம்பவம் தொடர்பான மேலதீக விசாரணைகளை பொலீசார்   மேற்கொண்டு வருகின்றனர்


.

No comments:

Post a Comment