July 4, 2015

பல்கலைகழக கலைப்­பீட மாணவிக்கு நேர்ந்த துயரம்!

பல்­க­லைக்­க­ழ­க­மொன்றின் கலைப்­பீட மாணவிக்கு நேர்ந்த துயரக்கதையிது. தனது விரிவுரையாளரை காதலித்த மாணவி இப்பொழுது நடுத்தெருவிற்கு வந்துள்ளார்.

திருமணம் செய்வதாக வாக்களித்து, மாணவியை நீண்டகாலமாக காதலித்து
உல்லாசம் அனுபவித்து வந்த விரிவுரையாளர், மாணவியின் காதில் பூச்சுற்றிவிட்டு மாயமாகிவிட்டார்.

மலையக பகுதியை சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். தென்பகுதி பல்கலைகழகம் ஒன்றில் அவர் கல்வி கற்று வருகிறார்.

குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலைப்­பீட இளம் விரி­வு­ரை­யாளர் ஒரு­வரே இவ்­வாறு தலை­ம­றை­வா­கி­யி­ருப்­ப­தா­கவும் பல்­க­லைக்­க­ழக வட்­டாரங்கள் கூறுகின்றன.

திரு­ம­ண­மான இளம் விரி­வு­ரை­யாளர் ஒருவர் கலைப்­பீ­டத்தில் கற்று வந்த மாணவி ஒருவர் மீது காதல் கொண்டு அவரைத் திரு ­மணம் செய்து கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்து மிக நெருக்­க­மாகப் பழகிவந்­துள்ளார். தனது தேவைகள் நிறைவடைந்ததும் அவர் மாயமாகிவிட்டார்.

தன காதில் பூச்சுற்றிய விரிவுரையாளரின் செயலால் தான் நிர்க்கதியான நிலைக்கு வந்து விட்டதாக குறிப்பிட்ட நீண்ட மின்னஞ்சலொன்றை ஆசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார் மாணவி. இந்த மின்னஞ்சலை தனது தோழி மற்றும் பல்கலைகழக நிர்வாகத்திற்கும் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து தலைமறைவான விரிவுரையாளர் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment