July 1, 2015

மஹிந்தவுக்கு ஆதரவாக மெதமுலன நோக்கி பேரணி(படம் இணைப்பு)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறங்குமாறு வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்களினால் இன்று அம்பாந்தோட்டையில் மெதமுலன நோக்கி வாகன பேரணியொன்று நடத்தப்பட்டது.
அந்த பேரணியில் முன்னாள் எம்.பிக்கள் பலர் கலந்துக்கொண்டதுடன் பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் மெதமுலனையில் அவர்களுக்கு மத்தியில் மஹிந்த இன்னும் சில நிமிடங்களில் தனது தீர்மானம் தொடர்பாக அறிவிக்கவுள்ளார்.
தனது தந்தையான டீ.ஏ.ராஜபக்‌ஷ முதலாவதாக கூட்டம் நடத்திய மரமொன்றின் கீழிருந்தே மஹிந்தவும் இன்றைய தினம் அந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார். அதற்காக அந்த மரத்தின் கீழ் விசேட மேடையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
6/30/2014 10:05 PM
6/30/2014 10:03 PM
07
06
05

No comments:

Post a Comment