June 30, 2015

கல்வியங்காடு அம்மன் ஆலய கிணற்றில் பெண்ணின் சடலம்(படம் இணைப்பு)

ல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலய கிணற்றிலிருந்து குடும்பத் தலைவி ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
கல்வியங்காடு புதியசெம்மனி வீதியைச்சேர்ந்த 4 பிள்ளைகளின் அம்மாவான
(வயது 65) மேர்வின் கமலநாயகி என்பவரே உயிரழந்தவராவார்.
நேற்று காலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார் என்றும் மதியம் வரை அவரைக் காணவில்லை எனவும் பின்னரே அவரைத் தேடிச் சென்றதாகவும் அயலவர்கள் மற்றும் குடும்பத்தினருடைய நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னரே குறித்த வீட்டிலிருந்து 250 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள கிணற்றில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment