June 23, 2015

வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை!- பிரதமர்!

வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றும் தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கையை இராணுவம் எடுத்திருக்குமானால் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொடிகாமம் இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே ரணில் இதனை தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்தவரையில் சம்பூர் கடற்படை முகாமை மாத்திரம் அது அகற்றியதாக ரணில் குறிப்பிட்டார்.
அதுவும் முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்த முகாம் அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் அகற்றப்பட்ட முகாமுக்கு பதிலாக மற்றும் ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment