March 9, 2015

கருணாவால் கடுப்பான சிறீ MP!

புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியால் முன்னெடுகப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில்,

தன்னெழுச்சியாக திரண்டு வந்திருக்கின்ற இன்றைய பெண்கள் நாளின் திரட்சியை பார்க்கின்றபோது நமது நாளைய நாட்கள் மீது நம்பிக்கை எழுகின்றது.
எமது பெண்கள் தாய்மார்கள் இன்றைக்கும் கண்ணீரோடு தங்கள் பிள்ளைகளை தேடி அலைவதும் உண்ணாவிரதம் இருப்பவர்களாக இருக்கின்றார்கள். இன்றைக்கு புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.

No comments:

Post a Comment