March 2, 2015

உருவப் பொம்மை எரிப்பிற்கும் எனக்கு சம்பந்தமில்லை- சுரேஷ் பிரேமச்சந்திரன்!

உருவப் பொம்மை எரிப்பு சம்பவதுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என் தமிழ்த் தேசியக் குட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த்துள்ளார்.


யாழில் அண்மையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் துணைபோயிருப்பதாகக் குற்றம் சாட்டி  அவர்களின் இந்த நடவடிக்கையால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு குற்றஞ்சாட்டியுள்ளது 

தமிழரசுக் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், உருவப் பொம்மை எரிப்புக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெருவித்துள்ளர்.

மேலும் விமர்சனம் என்பது கூட, அரசியல் கருத்து குறித்த விமர்சனமே ஒழிய அவை தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment