March 4, 2015

வவுனியாவில் குடும்பஸ்தர் சுட்டுப் படுகொலை!


குறித்த கொலைசம்பவப் பின்னணி தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று செவ்வாய் கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மாகாறம்பைக்குளம், பிஎஸ்சி ஒழுங்கையில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தைச் சேர்ந்த வடிவேல் அழகன் (வயது 45) என்பவரே மரணமடைந்தவராவார்.
இது தொடர்பில் அயலவர்கள் தெரிவிக்கையில், இரவு எங்கள் வீட்டுக்கு அண்மையில் வாகனச் சத்தம்கேட்டது. அதன் பின் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் கேட்டன. காலையில் பார்த்த போதே வீதியில் ஒருவர் இறந்து கிடந்தார் எனத் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் சடலத்தின் அருகில் காணப்பட்ட வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் கைப் பை ஒன்றும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரணமடைந்தவர் ரெலோ அமைப்பின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் முன்னர் போட்டியிட்டவர் என்பதுடன் சன்ரீவி மீள்ஒளி பரப்பு நிலையத்தை வவுனியாவில் முன்னர் நடத்தி வந்தமையும் தற்போது வைரவபுளியங்குளத்தில் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.SAM_0229

No comments:

Post a Comment