March 4, 2015

இலங்கை இந்திய பேச்சுவார்த்தைகள் 11ம் திகதி!!

சிறிலங்கா மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்த மாதம் 11ம் திகதி நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவின் த ரைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நாளையதினம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்க வேண்டும்.

எனினும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கை அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்தது.

இதன்படி எதிர்வரும்11ம் திகதி சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தமிழக மீனவர்கள் யாழ்ப்பாண மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்த பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் தமிழகத்தில் இயங்கும் அப்பாவி மீனவர்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யு.அருளாந்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment